IMF விதித்துள்ள கடும் நிபந்தனையை ஏற்று கடன் வாங்க தயாரில்லை! ஆளும் கட்சி உறுப்பினர்
Mayoorikka
2 years ago
இலங்கை அரசாங்கம் விதித்துள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு சர்வதேச நாணய நிதியம் (IMF) கடன்களை வழங்கத் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சஹான் பிரதீப் தெரிவித்துள்ளார்.
“கடன் வாங்குவது அன்றிலிருந்து நடந்து வருகிறது. கட்டாயப்படுத்தி கடன் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் அரசாங்கத்திடம் எதிர்பார்க்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இலங்கையிடமிருந்து கடன்களை பெற்றுக்கொள்ள தயாராக உள்ளோம். ஆனால் சர்வதேச நாணய நிதியத்தியம் ( IMF )விதித்துள்ள கடுமையான நிபந்தனைகளை ஏற்று கடன் வாங்க நாங்கள் தயாராக இல்லை.
அலரிமாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.