துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழப்பு!

Reha
2 years ago
துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழப்பு!

இன்று (15) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நெடுங்கேணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனாபிலவு பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் 33 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.