இந்தியப் பெண்ணின் தங்கச்சங்கிலியை அறுக்க முயன்றவர்களுக்கு நேர்ந்த கதி

#Police #Colombo
Prathees
2 years ago
இந்தியப் பெண்ணின் தங்கச்சங்கிலியை அறுக்க முயன்றவர்களுக்கு நேர்ந்த கதி

பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க நகையை கொள்ளையடிக்க வந்த இருவர்,அருகில் இருந்தவர்களிடம் சிக்கியுள்ளனர்.

நேற்று பிற்பகல் கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் இந்திய பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க நகையை  அறுக்க முற்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர்.

கொள்ளை சம்பவம் நடந்தபோது, ​​அருகில் இருந்தவர்கள் குறித்த இருவரையும் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.