முடியாவிட்டால் இராஜினாமா செய்துவிட்டு வீட்டுக்குப் போ: தயாசிறி

#SriLanka
Prathees
2 years ago
முடியாவிட்டால் இராஜினாமா செய்துவிட்டு வீட்டுக்குப் போ: தயாசிறி

கலாநிதி பி.பி.ஜயசுந்தரவினால்  இந்த நாட்டில் பல பிரச்சினைகள் எழுந்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிக்கும் பொறுப்பு பி.பி.ஜயசுந்தரவுக்கு இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் செயலாளர் சரியாக வேலை செய்ய முடியாவிட்டால் பதவியை இராஜினாமா செய்துவிட்டு வீட்டுக்கு செல்ல வேண்டும் என்றும் அவர் கூறினார்.

நிகழ்வு  ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.