24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு படையெடுப்பு!

#Tourist
Mayoorikka
2 years ago
24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு படையெடுப்பு!

நாட்டில் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருவதாக சுற்றுலா துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கடந்த 12 நாட்களில் 24,773 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
 
இதேவேளை கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதல் தற்போது வரையில் 1,29,762 சுற்றலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலானோர் இந்தியா, ரஷ்யா, இங்கிலாந்து, ஜேர்மனி, அவுஸ்திரேலியா, கசகஸ்தான், அமெரிக்கா, பிரான்ஸ், கனடா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.