எரிவாயுவுடன் இலங்கை வந்த மற்றொரு கப்பல்!

Mayoorikka
2 years ago
எரிவாயுவுடன் இலங்கை வந்த மற்றொரு கப்பல்!

இரண்டாயிரம் மெட்ரிக் தொன்னுக்கும் அதிக எரிவாயுவை ஏற்றிய மற்றுமொரு கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திசாநாயக்க இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த கப்பலில் கொண்டுவரப்பட்டுள்ள எரிவாயுவின் தரத்தை பரிசோதிப்பதற்காக மாதிரிகள் பெறப்பட்டு, அவற்றை பரிசோதிப்பதற்காக இரு நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.