துப்பாக்கி ரவையுடன் தலதா மாளிகைக்குச் சென்ற பெண் கைது

#Arrest
Prathees
2 years ago
 துப்பாக்கி ரவையுடன் தலதா மாளிகைக்குச் சென்ற பெண் கைது

தலதா மாளிகையை வழிபாடு செய்ய வந்த பெண்ணொருவரின் பயணப் பொதியில் இருந்து டி-56 ரக துப்பாக்கி ரவை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை தலதா மாளிகைக்கு அவர் வழிபடச் சென்றுள்ளார்.

முன்னாள் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் மனைவியான குறித்த பெண்இ தலதா  ஆலய நுழைவாயிலுக்கு அருகில் பக்தர்களால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தலதா மாளிகைக்குச் செல்லும் பாதையில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு சமிக்ஞை அமைப்புகளை பொலிஸார் சோதனையிட்ட போது குறித்த பெண்ணின் பயணப் பையில் இருந்து உயிருள்ள தோட்டா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணின் கணவர் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் எனவும் அவர் சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.