சீன நிறுவனத்திடமிருந்து கோரிய உரத்தை ஒப்படைக்குமாறு கோரிக்கை

#China
Prathees
2 years ago
சீன நிறுவனத்திடமிருந்து கோரிய உரத்தை ஒப்படைக்குமாறு கோரிக்கை

சீனாவின் கிண்டா ஓ பயோடெக் நிறுவனத்திடம் இருந்து இலங்கை கோரிய உரத் தொகையை இலங்கையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என  உதித் ஜயசிங்க, விவசாய அமைச்சின் செயலாளரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தத்திற்கு சீன நிறுவனம் கட்டுப்பட்டதாகவும்இ தயாரிப்பு வழங்கப்படாவிட்டால், இலங்கை கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருப்பதால் இந்த நிறுவனங்களால் இறக்குமதி செய்யப்பட்ட உரக் கப்பலை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

 பின்னர் அதற்காக 6.7 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.