வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்காக அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் புதிய சேவை!

Mayoorikka
2 years ago
வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்காக அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும்  புதிய சேவை!

வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள்பதிவாளர் நாயகம் திணைக்களத்தில் பெற்றுக் கொள்ளும் ஆவணங்கள் இணையத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அத் திணைக்களம் அறிவித்துள்ளது.

பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களை  இவ்வாறு இணையத்தில்  பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அறிவித்துள்ளது.

வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள், பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் ந்ந்ந்.ர்க்ட்.கொவ்.ல்க் என்ற இணையத்தளத்திற்குச் சென்று உரிய ஆவணங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

குறித்த திணைக்களம் இலங்கையில் மட்டுமே ஆவணங்களை விநியோகிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.