சேருபிடிய விவசாயிகளால் பெறப்பட்ட மேலும் திரவ உர கேன்கள் வெடிப்பு!

Prathees
2 years ago
சேருபிடிய விவசாயிகளால் பெறப்பட்ட மேலும் திரவ உர கேன்கள் வெடிப்பு!

பதுளை மாவட்டத்தில் சேருபிட்டிய பிரதேசத்திலும் திரவ உர கேன் வெடித்துச் சிதறிய சம்பவம் பதிவாகியுள்ளது. 

சேருபிட்டிய விவசாயிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும் தற்போதைய தெஹியத்தகண்டிய பிரதேச சபை ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினருமான ஏ.ஜி. ஜயதிஸ்ஸ,  தனக்கு நெல் சாகுபடிக்காக வழங்கப்பட்ட பல திரவ உர கேன்கள் அண்மைய நாட்களில் வெடித்துச் சிதறியதாக அவர் கூறினார்.

தமக்குக் கிடைத்த திரவ உரக் கேன்களில் பெரும்பாலானவை வெடித்துச் சிதறியுள்ளதாகவும் மற்றுமொரு கேன் வெடிக்க உள்ளதாகவும் செருபிட்டிய கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

யூரியாவிற்குப் பதிலாக நெற்செய்கைக்குப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படும் இந்த திரவ உரமானது மாத்தளை பிரதேசத்தின் உற்பத்தியாகும்.