17 வருடங்களுக்கு முன் மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி  கொலை செய்த நபருக்கு மரண தண்டனை

#Court Order
Prathees
2 years ago
17 வருடங்களுக்கு முன் மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி  கொலை செய்த நபருக்கு மரண தண்டனை

17 வருடங்களுக்கு முன்னர் ஹம்பாந்தோட்டையில் தனது 18 வயது மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொலை செய்த நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

43 வயதான ஐந்து பிள்ளைகளின் தந்தை ஒருவருக்கு ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் இன்று (17) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

ஹம்பாந்தோட்டை சிறிபோபுர பிரதேசத்தில் வசிக்கும் 43 வயதான துவான் அனுஷ் யூனுஷ் என்பவருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர், குடும்பத் தகராறு காரணமாக 08.04.2004 அன்று இரவு 9.30 மணியளவில் ஹம்பாந்தோட்டையில் உள்ள அவரது வீட்டில் வைத்து 18 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயான மனைவிக்கு மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்ய  முயற்சித்துள்ளார்.

தீ விபத்தில் படுகாயமடைந்த 18 வயதுடைய பெண் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன்பின்னர் சிறுமியின் உடல் நிலை மோசமானதால் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 11.04.2004 அன்று உயிரிழந்தார்.

பின்னர் சம்பவம் தொடர்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலை பொலிசார் ஹம்பாந்தோட்டை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் கணவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் ஆரம்பகட்ட விசாரணைகளை அடுத்து, சந்தேகநபர் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

16.12.2005 அன்று ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக சட்டமா அதிபரினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

நீண்ட விசாரணையின் பின்னர்இ ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல, குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக வழக்குத் தொடுத்த குற்றச்சாட்டை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்ததற்காக அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.