யாழில் விறகுகளுக்கு பெரும் மவுசு!

#SriLanka #Jaffna
Nila
2 years ago
யாழில் விறகுகளுக்கு பெரும் மவுசு!

யாழ். குடாவில் ஏரிவாயு தட்டுப்பாடுகாரணமாக அங்கு விறகுகளுக்கு பெரும் மவுசு ஏற்பட்டுள்ளது

தெற்கிலிருந்து காட்டு விறகு வராமையினால் யாழிலுள்ள வேம்பு மற்றும் பூவரசு விறகுகளுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டிருப்பதாக விறகு விற்பனை நிலைய உரிமையாளர்கள் தொிவித்துள்ளனர்.

அதோடு விறகு விலையும் சடுதியாக அதிகரித்திருக்கின்றது. ஒரு கிலோ 15 ரூபாயாக விற்கப்பட்ட விறகு தற்போது 20 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகின்றது.

நாட்டில் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுபாடு நிலவும் பொருட்டு இந்த விறகுகளுக்கு மவுசு ஏற்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.