கட்டுப்பாட்டை இழந்த பேருந்தால் ஏற்பட்ட விபரீதம்
#Accident
Prathees
2 years ago
களுத்துறை கொங்கஸ் சந்தி பகுதியில் அதிவேகமாக பயணித்த பேருந்து ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து இரண்டு வான்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.
விபத்தில் வான் ஒன்று கடைக்குள் வீசப்பட்டுள்ளது. இந்த விபத்து இன்று (18) மாலை இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பேருந்தில் இருந்த ஒருவர் காயமடைந்து களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பேருந்தின் சாரதியை பொலிசார் கைது செய்துள்ளதுடன் மேலதிகவிசாரணைகளை மேற்கொண்டுள்ளனர.