எதிர்வரும் நாட்களில் மரக்கறிகளின் விலைகள் அதிகரிக்க கூடும்

Prabha Praneetha
2 years ago
எதிர்வரும் நாட்களில் மரக்கறிகளின் விலைகள் அதிகரிக்க கூடும்

நாட்டில் எதிர்வரும் நாட்களில் மரக்கறிகளின் விலைகள் அதிகரிக்க கூடும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

நேற்று கொழும்பில் உள்ள முக்கிய பொருளாதார மத்திய நிலையங்களில் ஒரு கிலோகிராம் பச்சை மிளகாய் 1000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது.

இதற்கிடையில், ஒரு கிலோகிராம் தேசிக்காய் 590 மற்றும் 600 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை உள்ளூர் விளைபொருட்களில் ஒன்றான பூசணிக்காய் ஒரு கிலோ 80 முதல் 100 வரை விற்கப்பட்டது.