நிரந்தர நியமனம் வழங்கும் நடவடிக்கை ஜனவரி ஆரம்பம்
Prabha Praneetha
2 years ago
51,000 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நடவடிக்கை ஜனவரி 03 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரச அபிவிருத்தி அலுவலர்களாக இக்குழுவினர் நியமிக்கப்பட்டவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஓராண்டு பயிற்சி முடித்த 42,500 பேருக்கு முதலில் நியமனம் வழங்கப்படும் எனவும் மீதமுள்ளவர்கள் ஓராண்டு பயிற்சி முடித்த பின்னர் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் திகதி நியமிக்கப்படுவர் என தெரிவிக்கப்படுகின்றது.