இந்தவாரம் இலங்கைக்கு ஒன்றரை பில்லியன் டொலர் கிடைக்கும்! அது இரகசியம்
#Ajith Nivat Cabral
Prathees
2 years ago
இந்த வார இறுதிக்குள் இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு 3 பில்லியன் டொலர்களை தாண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
பணம் வரும் வழி பற்றி தற்போது வெளிப்படுத்த முடியாது எனவும் பணம் கிடைத்தவுடன் தெரியவரும் என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
வார இறுதி ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு மத்திய வங்கியின் ஆளுநர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு தற்போது 1.5 பில்லியன் டொலர்களாக வரையறுக்கப்பட்டுள்ளது.