தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சடலம் : கிளிநொச்சியில் பரபரப்பு !!
Prabha Praneetha
2 years ago
கிளிநொச்சியில் இளம் தாயொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது
கிளிநொச்சி போலீஸ் பிரிவிற்கு உற்பட்ட ஜெயந்தி நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்த இளம் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்
32 வயதுடைய திலகரத்னா ஜெயசீலி என்ற 3 பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார் .
கிளிநொச்சி சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகஸ்தரான இவர் முன்பள்ளி ஆசிரியராக கடமையாற்றினார் .
குறித்த பெண்ணின் மரணத்தில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன .
அந்தவகையில் சடலத்தை நீதவான் பார்வையிட்டபின்னர் போலீசார் விரிவான விசாரணைகளை ஆரம்பிக்க உள்ளனர் .