சிறைச்சாலையில் மரணமடைந்த பிரதேச சபை  உறுப்பினரின் மரணத்திற்கான  காரணம் வெளியானது!

#Death #Police
Prathees
2 years ago
சிறைச்சாலையில் மரணமடைந்த பிரதேச சபை  உறுப்பினரின் மரணத்திற்கான  காரணம் வெளியானது!

பொலிஸ் காவலில் வைத்து உயிரிழந்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மரணத்திற்கான காரணம் குறித்து விளக்கமளித்து பொலிஸ் தலைமையகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இன்று (19) மேற்கொள்ளப்பட்ட அவரது சடலத்தின் பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் இது தெரியவந்துள்ளது.

இரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக மாரடைப்புஏற்பட்டுள்ளதாகவும் இதன்காரணமாக மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹங்கம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இந்த சம்பவம் தொடர்பில் அறிவித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அம்பாந்தோட்டை நீதிமன்ற வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்டது.

ஹுங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரன்ன நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அனுமதிப்பத்திரம் இன்றி அரசாங்க மதுபானங்களை விற்பனை செய்த 61 வயதான முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பிரேமதிலக்க அமரவீர நேற்று (18) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த போது அவர் திடீரென கீழே  விழுந்தார், பின்னர் ரன்ன மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்தார்.