அத்தியாவசிய உணவு மற்றும் எரிபொருளுக்கான கூப்பன் வழங்க திட்டம்
#Food
Prasu
2 years ago
தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருளுக்கான கூப்பன் திட்டம் முன்மொழியப்படும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் எரிபொருள் பாவனையை குறைக்கும் சாத்தியம் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அரசாங்கத்தினால் நெருக்கடியான காலகட்டத்தை எதிர்கொண்டுள்ள மக்களுக்கும் சில சிரமங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.