இலங்கையில் மனைவி, பிள்ளைகளை வீட்டிற்குள் பூட்டி வைத்த கணவர்-வெளியான அதிர்ச்சிக் காரணம்!
Nila
2 years ago
கலேவெல − பம்பரகஸ்வெவ பகுதியில் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளை ஒரு வருடத்திற்கு அதிக காலம் வீட்டிற்குள் அடைத்து வைத்த கணவர் ஒருவர் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் பரவிய கொவிட் வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து, தனது மனைவி மற்றும் குழந்தைகளை கணவர் வீட்டிற்குள் அடைத்து வைத்துள்ளதாக முறைபாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வீட்டில் அடைக்கப்பட்டுள்ளமையினால், தனக்கும் தனது குழந்தைகளுக்கும் கடுமையான மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக மக்குளுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தில், மனைவி முறைபாடு செய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மக்குளுகஸ்வெவ பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்