பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட ராய் புயல்; உயிழந்தவர்களின் எண்ணிக்கை 208 ஆக அதிகரிப்பு!

Nila
4 years ago
பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட ராய் புயல்; உயிழந்தவர்களின் எண்ணிக்கை 208 ஆக அதிகரிப்பு!

பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட ராய் புயல் தாக்கத்தில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 208 அதிகரித்துள்ளது.

பிலிப்பைன்ஸில் இந்த ஆண்டு ஏற்பட்ட புயல் தாக்கங்களில் மிகவும் பாரதூரமான அனர்த்தம் இதுவாகும் என அந்த நாட்டு தேசிய பொலிஸ் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், ராய் புயல் தாக்கத்தில் சிக்குண்டு சுமார் 52 பேர் காணாமல் போயுள்ளனர்.

3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன

பிலிப்பைன்ஸில் இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள 15வது சூறாவளி அனர்த்தமாக இது காணப்படுகின்ற நிலையில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4