திருவெம்பாவை இன்றுடன் நிறைவு பெறுகிறது.

#spiritual #God
திருவெம்பாவை இன்றுடன் நிறைவு பெறுகிறது.

திருவெம்பாவை பூசை இன்று திங்கட்கிழமை நிறைவு பெறுகிறது. "பாவைநோன்பு" என அழைக்கப்படும் திருவெம்பாவை உற்சவம் கடந்த 11ம் திகதி  ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வந்தது. ஆருத்திரா அபிஷேகம் நேற்று ஞாயிறு இரவு நடைபெற்றது. இன்று திங்கள்

சூரியோதயத்துக்கு முன்பாக ஆருத்திரா தரிசனம் நடைபெற்றது.

திருவெம்பாவையின் முடிவு தினமான இன்று திருவாதிரை பூசையும் நடேசர் ஆருத்திரா தரிசனமும் நடைபெறுகின்றன.

நடராஜப் பெருமானை இத்தினத்தில் தரிசிப்பதும் விரதம் அனுஷ்டிப்பதும் இந்துக்களின் பெரும் பேறாகும்.