யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
Reha
2 years ago
யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இன்று(20) காலை முடமாவடி சந்தியில் உயிரிழந்த நிலையில் சடலம் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கந்தர்மடம், பழம் வீதியில் வசித்துவந்த 2 பிள்ளைகளின் தந்தையான 67 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்தள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.