யாழ். பல்கலைகழக விஞ்ஞான குழுக்களுக்கிடையில் மோதல். 5 பேர் காயம்!

#SriLanka #Jaffna
யாழ். பல்கலைகழக விஞ்ஞான குழுக்களுக்கிடையில் மோதல். 5 பேர் காயம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர் இருகுழுக்களுக்குள் ஏற்பட்ட மோதலில் ஐவர் காயமடைந்தனர்.

இந்த மோதல் பால்பண்ணி சந்தியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்நிலையில் காயமடைந்த மாணவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பாக எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என்றும் விசாரணைகள் தொடருக்கின்றன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.