மற்றுமொரு விலை அதிகரிப்பு: அதிர்ச்சியில் மக்கள்
#Bus
Mayoorikka
2 years ago
எரிபொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பஸ் கட்டணத்தை அதிகரிப்பது அத்தியாவசியமானது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை 25 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என சங்கத்தின் தலைவராணா கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
எவ்வாறாயினும், பஸ் கட்டண திருத்தம் தொடர்பான தீர்மானத்தை எட்டுவதற்கு இன்று பிற்பகல் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.
மேலும், அண்மையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போது நாடு எதிர்கொண்ட நிலைமையை கருத்திற் கொண்டு பஸ் கட்டணத்தை அதிகரிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.