இலங்கைக்கு படையெடுக்கும் வெளிநாட்டவர்கள்!

#SriLanka
Nila
2 years ago
 இலங்கைக்கு  படையெடுக்கும் வெளிநாட்டவர்கள்!

இலங்கைக்கு தினசரி வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 3000ஐ தாடியுள்ளதாகவும், இந்தியாவில் இருந்தே அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவதாகவும் சுற்றுலா அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

ஒகஸ்ட் மாதத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் எளிதாக்கப்பட்டதன் காரணமாகவே இந்த உயர்ந்த இலக்குகளை அடைய உதவியதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்படி, செப்டம்பர் – 13,000, அக்டோபர் – 22,000 +, நவம்பர் – 44,000 + மற்றும் டிசம்பர் (இன்று வரை)- 44,000 + சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

2021 ஜனவரி முதல் இன்று வரை சுமார் 150,000 சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவு செய்யப்பட்டுள்ளன.இந்த ஆண்டு 200,000 வருகையை இலக்காகக் கொண்டுள்ளதாகவும், ஆண்டின் இறுதியில் (2021) குறைந்தபட்சம் 175,000 முதல் 185,000 சுற்றுலாப் பயணிகளின் வருகை எட்டப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.