இலங்கை எதிர்நோக்கவுள்ள பஞ்சத்திற்கு  தீர்வு கூறிய  அமைச்சர் 

#Mahinda Amaraweera
Prathees
2 years ago
இலங்கை எதிர்நோக்கவுள்ள பஞ்சத்திற்கு  தீர்வு கூறிய  அமைச்சர் 

அடுத்த வருடம் இலங்கை எதிர்நோக்கும் பஞ்சத்திற்கு தீர்வாக விவசாயத்துறையில் பயிர்ச்செய்கை யுத்தத்தை அரசாங்கம் உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என  சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

உர பிரச்சனையால் விவசாயிகள் பயிர்ச்செய்கையைக் கைவிடுதல், உரிய காலத்தில் சாகுபடி செய்ய முடியாததால் ஏற்பட்டுள்ள பாதிப்பு, மேலும், வெள்ளத்தால் ஏற்பட்ட பயிர்கள் சேதம் குறித்து விரிவான ஆய்வு நடத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்க  நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.