இரண்டு வயது குழந்தையை கொடூரமாக தாக்கிய பெற்றோர் கைது!
#SriLanka
#children
Nila
2 years ago
களுத்துறை தொடம்கொட பிரதேசத்தை சேர்ந்த 2 வயதுடைய குந்தையை கொடூரமாக தாக்கிய பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
30 வயதுடைய கணவன் மனைவி இணைந்து குழந்தையை தினமும் கொடூரமாக தாக்குவதாக கிடைத்த தகவலுக்கமைய இந்த தம்பதி கைது செய்யப்பட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
சந்தேக நபர்களான இந்த தம்பதி, குழந்தை பிறந்தது முதல் தினமும் அடித்து கொடுமைப்படுத்துவதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த தகவலுக்கமைய இவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தாக்குதலினால் காயமடைந்த குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.