தேவையான பணம் கையிருப்பில் உள்ளது: மத்திய வங்கி ஆளுநர்
Mayoorikka
2 years ago
பொருளாதாரம் தொடர்பில் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வரும் பல்வேறு தரப்பினர் நாட்டுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
கடன் தவணை செலுத்துவதற்கும் மற்றும் பிற நடவடிக்கைகளுக்கும் நாட்டில் பண கையிருப்பு இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கை எதிர்க்கொண்டுள்ள அந்நிய செலாவணி நெருக்கடியை சமாளிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பை சுதந்திரமாக நிர்ணயம் செய்ய அனுமதிப்பது உள்ளிட்ட உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.