அடையாளம் காணப்படாத ஆணின் சடலம் மீட்பு!
Reha
2 years ago
அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது எனப் பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
குருநாகல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெற்கு வாவிக்கு அருகிலிருந்து சுமார் 35 தொடக்கம் 45 வயதுடைய 05 அடி 05 அங்குல உயரமுடைய ஆணின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனைக்காக குருநாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் குருநாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.