மாமிச பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட செய்தி

#Food
Mayoorikka
2 years ago
மாமிச பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட செய்தி

அடுத்த மாதம் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக கால்நடை வளங்கள், பண்ணைகள் மேம்பாடு பால் மற்றும் முட்டை சார்ந்த கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் டி.பி ஹேரத் தெரிவித்தார்.

கால்நடை தீவன பற்றாக்குறையே விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இருந்தது.

எனினும், இப்பிரச்சினைக்கு தீர்வாக 200,000 தொன் கால்நடை தீவனத்தை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத்  தெரிவித்துள்ளார்.

இதனால் பண்டிகை காலங்களில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.