ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்திய கொழும்பு பல்கலை மாணவர்களை பாராட்டிய சந்திரிக்கா

#Chandrika Kumaratunga
Prathees
2 years ago
ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்திய கொழும்பு பல்கலை மாணவர்களை பாராட்டிய சந்திரிக்கா

கொழும்பு பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில்  வேந்தர் முருத்தெட்டுவே ஆனந்த தேரருக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பட்டத்தை ஏற்காமல்  மேற்கொண்ட போராட்டம் மிகவும் ஜனநாயகமானது என  முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

இந்தப் போராட்டம் மிகவும் பொருத்தமான போராட்டம் எனவும் அவர் பாராட்டியுள்ளார். 

வன்முறை இல்லாமல்இ இந்த அகிம்சைப் போராட்டம் அறிவார்ந்த பல்கலைக்கழக மாணவர்களால்,  அரசாங்கத்தால் தகாத முடிவுகளை எடுத்தபோது அவர்கள் செய்த சந்தர்ப்பவாத மற்றும் புத்திசாலித்தனமான நடவடிக்கையாகும். அது மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகும் என சந்திரிக்கா மேலும்  தெரிவித்துள்ளார்.