பம்பலப்பிட்டியில் ரயில் மோதி 19 வயது மாணவி பலி

#Accident #Colombo
Prathees
2 years ago
பம்பலப்பிட்டியில் ரயில் மோதி 19 வயது மாணவி பலி

பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்திற்கு அருகில் கடந்த 21ஆம் திகதி மதியம் மருதானையிலிருந்து பெலியத்த நோக்கி பயணித்த ரயிலில் மோதி பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் வெயங்கொட மாளிகதென்ன பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய பாடசாலை மாணவி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுமி உயிரிழந்துள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

பம்பலப்பிட்டியில் உள்ள க.பொ.த உயர்தர தனியார் வகுப்பில் கலந்துகொண்ட இரண்டாவது நாளிலேயே குறித்த சிறுமி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பம்பலப்பிட்டி பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.