கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 1,500க்கும் மேற்பட்ட கொள்கலன்கள்

Reha
4 years ago
கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 1,500க்கும் மேற்பட்ட கொள்கலன்கள்

டொலர் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரிசி, சீனி, பருப்பு, கடலை, வெள்ளைப்பூடு உள்ளிட்ட மேலும் பல அத்தியாவசிய பொருட்கள் குறித்த கொள்கலன்களில் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை விடுவிப்பதற்குத் தேவையான டொலரை வழங்குமாறு மத்திய வங்கியிடம் தற்போது கோரியுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4