அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்த முக்கிய அறிவிப்பு:- போராட்டம் இன்றும் தொடருமா ?

Prabha Praneetha
2 years ago
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்த முக்கிய  அறிவிப்பு:- போராட்டம் இன்றும் தொடருமா ?

தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை பணிப்புறக்கணிப்பு தொடரும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் பல தொழிற்சங்கங்கள் இன்று தமது தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக அதன் உறுப்பினர் கலாநிதி பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

வருடாந்த மருத்துவ இடமாற்றம் உள்ளிட்ட ஏழு கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நேற்று முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளது.

எனினும் இந்த பணிப்புறக்கணிப்பு நியாயமற்றது என பேராதனை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அர்ஜுன திலகரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் சுகாதார நிபுணர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இன்று காலை இரத்தினபுரி வைத்தியசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு பேரணியொன்றை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் அழைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

இந்த வேலைநிறுத்தத்துடன், சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள இரண்டு போதனா வைத்தியசாலைகளின் சேவைகள் இடைநிறுத்தப்படும், அத்துடன் ஒரு பொது வைத்தியசாலை, அத்துடன் ஆறு ஆதார வைத்தியசாலைகள், 32 பிராந்திய வைத்தியசாலைகள் மற்றும் 19 சுகாதார உத்தியோகத்தர் அலுவலகங்கள் மூடப்படும்.

அனைத்து மருத்துவ நிபுணர்களும் , மருத்துவ ஆய்வக விஞ்ஞானிகள், மருந்தாளுநர்கள், கதிரியக்க வல்லுநர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் உட்பட, துணை மருத்துவ சேவையுடன் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.