மெத்தனப் போக்கில் எரிவாயு நிறுவனங்கள் செயற்பட்டால் மூடுவதற்கு பின்நிற்கப் போவதில்லை - அமைச்சர்

Prabha Praneetha
2 years ago
மெத்தனப் போக்கில் எரிவாயு நிறுவனங்கள் செயற்பட்டால் மூடுவதற்கு பின்நிற்கப் போவதில்லை - அமைச்சர்

எரிவாயு நிறுவனங்களை மூடி விட நேரிடும் என நுகர்வோர் விவகார அமைச்சர் லசந்த அழகியவன்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தேவை ஏற்பட்டால் நிறுவனங்களை மூடி விடவும் தயங்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதிலும் எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வாடிக்கையாளர்களின் பாதுகாப்பினை உறுதிப் படுத்தாது மெத்தனப் போக்கில் எரிவாயு நிறுவனங்கள் செயற்பட்டால் அவற்றை மூடுவதற்கு பின்நிற்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.