கடும் மன அழுத்தத்தில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்

Prabha Praneetha
4 years ago
கடும் மன அழுத்தத்தில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்

நாட்டின் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில், தான் கடும் மன அழுத்தத்தில் இருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், எவ்வாறான பிரேரணைகள் முன்வைக்கப்பட்டாலும் சர்வதேச நாணய நிதியத்திடம் கடனைப் பெறுவதற்கு செல்லப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வது பெரும் ஆபத்து எனவும், நாட்டின் பொருளாதார பிரச்சினைகளை சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லாமலேயே சமாளிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடனை வேறுவிதமாக நிர்வகித்தால் பிரச்சினை இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு கடன்களை பெற்றுக்கொள்வது அர்த்தமற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதன் மூலம் முதலீட்டாளர்களோ சுற்றுலா பயணிகளோ இலங்கைக்கு வரமாட்டார்கள் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4