போதைப்பொருள் பகுப்பாய்வு அறிக்கையை விரைவுப்படுத்த நடவடிக்கை
Prabha Praneetha
2 years ago
போதைப்பொருள் தொடர்பான அறிக்கைகளைப் பெறுவதற்கான கால எல்லை இரண்டு வாரங்களாக குறைக்கப்படும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
பகுப்பாய்வாளர் திணைக்களத்திடம் இருந்து அறிக்கைகளைப் பெறுவதற்கு சுமார் 08 மாதங்கள் எடுப்பதாகவும், அது ஒரு மாதமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளாா்.
அவ்வாறான அறிக்கைகளை உடனடியாக பெற்றுக்கொள்வதன் மூலம், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக விவரைவான சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.
இதற்காக பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.