அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களுக்கும் பலத்த பாதுகாப்பு!

Mayoorikka
2 years ago
அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களுக்கும் பலத்த பாதுகாப்பு!

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன இந்த பணிப்புரையை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இந்த வேலைத்திட்டத்தை தேவைக்கேற்ப நடைமுறைப்படுத்துமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக கத்தோலிக்க மதகுருக்களுடன் கலந்துரையாடி பாதுகாப்புத் திட்டத்தை வகுக்குமாறும் பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.