பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்ள சகலரும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும்! - டலஸ் கோரிக்கை

Reha
2 years ago
பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்ள சகலரும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும்! - டலஸ் கோரிக்கை

"நாட்டின் பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்வதற்கு அனைவரும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும்." - இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

மாத்தறையில் ன் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"அறிவு மற்றும் தரவுகளுடன் விடயங்களைத் தீர்மானிக்கும் யுகம் தற்போது உருவாகியுள்ளது. மாற்றமடையும் உலகுக்கேற்ப கல்வி முறையிலும் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.

இதேவேளை, மக்களை ஜீவனோபாய ரீதியில் பாதுகாக்கும் வேலைத்திட்டத்தை அரசு தொடர்ந்தும் முன்னெடுக்கும்" - என்றார்.