கொரோனாவிலிருந்து மேலும் பலர் குணமடைவு!

#Corona Virus
Mayoorikka
2 years ago
கொரோனாவிலிருந்து மேலும் பலர் குணமடைவு!

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த  மேலும் 323 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 558,850 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 582,149 அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,832 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.