எரிபொருள் விலையில் மீண்டும் மாற்றம்!

#prices
Mayoorikka
2 years ago
எரிபொருள் விலையில் மீண்டும் மாற்றம்!

எரிபொருள் விலையை மீண்டும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்பதை பொறுப்புடன் தெரிவிப்பதாக தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளா் ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளாா்.

எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதியாகும்போது மசகு எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்படும் என்பதால் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூட வேண்டும் என்பதால் இவ்வாறு எரிபொருளின் விலை மேலும் அதிகரிக்கப்படலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளாா்.

உலக சந்தையில் டொல்ர் 15ஆல் எரிபொருள் விலை வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையிலேயே எமது நாட்டில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளாா்.