விமான நிலையத்தில் இரண்டு இந்திய பிரஜைகள் கைது!

#Arrest #Airport
Prathees
2 years ago
விமான நிலையத்தில் இரண்டு இந்திய பிரஜைகள் கைது!

இரண்டு இந்திய பிரஜைகள் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருவரும் 1.049 கிலோ தங்கத்தை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு செல்ல முயற்சித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலைய வருகை முனையத்தில் நேற்று (24) மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் இன்று (25) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.