உலக நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை

#China
Prathees
2 years ago
உலக நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானை மையமாகக் கொண்டு புதிய வடிவிலான பயங்கரவாதம் குறித்து உலக நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்ட சீனாவின் வெளியுறவுத்துறை உதவி அமைச்சர் ஜிங்குவோ இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் ஐஎஸ்ஐஎஸ், அல்கொய்தா மற்றும் பல தீவிரவாத பயங்கரவாத குழுக்கள் மறுசீரமைக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

இந்த புதிய வடிவிலான பயங்கரவாதம் வெறும் வன்முறையைத் தாண்டி சைபர் தாக்குதல்கள் போன்ற தொழில்நுட்ப அணுகுமுறைகள் மூலம் செயல்படுத்தப்படும் அபாயம் உள்ளது என்றார்.

இந்த நிலைமையை கட்டுப்படுத்துவது ஒரு நாட்டினால் மட்டும் செய்ய முடியாது என்றும் அவர் கூறினார்.

புதிய பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதற்கு உலகத்தரம் வாய்ந்த ஒத்துழைப்பு தேவை என்றும் சீன வெளியுறவுத்துறை உதவி அமைச்சர் ஜி ஜின்பிங் வலியுறுத்தினா