வெடிக்கக் கூடிய எரிவாயு கொள்கலன்கள் வீடுகளில்: எச்சரிக்கை விடுப்பு

Mayoorikka
2 years ago
வெடிக்கக் கூடிய எரிவாயு கொள்கலன்கள் வீடுகளில்: எச்சரிக்கை விடுப்பு

மூன்று முதல் நான்கு லட்சத்திற்கும் இடையிலான பாதுகாப்பற்ற சமையல் எரிவாயு கொள்கலன்கள் இன்னும் வீடுகளில் இருப்பதாக எரிவாயு வெடிப்பு சம்பந்தமாக ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணைக்குழுவின் உறுப்பினர் ஓய்வுபெற்ற பேராசிரியர் டப்ளியூ.டி.டப்ளியூ. ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

இந்த பாதுகாப்பற்ற எரிவாயு கொள்கலன்களை திரும்ப பெற வேண்டும். எனினும் எரிவாயு நிறுவனங்கள் இதுவரையில் அதற்கான நடவடிக்ககைளை எடுக்கவில்லை எனவும் ஜயதிலக்க குறிப்பிட்டுள்ளார்.