ஐயப்பன் பாடல் பாடி அவர் அருள் பெறுவோம்.

#spiritual #God
ஐயப்பன் பாடல் பாடி அவர் அருள் பெறுவோம்.

ஆயிரம் தீபங்கள்...

ஆயிரம் தீபங்கள் ஆயிரம் தீபங்கள்
கண்ணில் தெரிகிறது - பம்பை ஆற்றில்
மணிகண்டன் பிறந்தது பம்பை ஆற்றில்

1. வில்லும் அம்பும் கொண்டவரை
விரதம் இருந்து வணங்கிடுவோம்
விரதம் இருக்கும் சக்தியினால்
வெற்றிகளை நாம் அடைந்திடுவோம் (ஆ)

2. சக்தி மிகுந்த ஆண்டவரை
சரணம் சொல்லி அழைத்திடுவோம்
சரணம் சொல்ல சரணம் சொல்ல
ஐயன் என்றும் நம்மிடையே (ஆ)

3. அழுதா நதியில் குளித்திடுவோம்
அன்னதானங்கள் செய்திடுவோம்
அமுதா மலையும் கரிமலையும்
கடந்து பம்பையை அடைந்திடுவோம் (ஆ)

4. ராமா ராமா என்று நாம்
ராம நாதனை வணங்கிடுவோம்
ராம நாதனை வணங்கி விட்டு
சபரிமலை ஏறிடுவோம்

5. சத்தியமான பதினெட்டாம்
படிகள் மீது ஏறிடுவோம்
படிப்படியாக நம் வாழ்வும்
உபயம் ஐயன் சக்தியினால் (ஆ)