சிங்கப்பூரில் COVID-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Prasu
2 years ago
சிங்கப்பூரில் COVID-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

சிங்கப்பூரில் கூடுதலான கர்ப்பிணிகள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வருவதாகத் தெரியவந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் இதுவரை இல்லாத அளவில் ஆக அதிகமானோர் தங்கள் மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக KK மகளிர், சிறுவர் மருத்துவமனை கூறியது.

செப்டம்பர் மாதத்திலிருந்து தடுப்பூசி போட்டுக்கொண்ட கர்ப்பிணிகளின் எண்ணிக்கை 30 முதல் 40 விழுக்காடு அதிகரித்ததாகச் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனை குறிப்பிட்டது.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர் COVID-19 கிருமித்தொற்றால் மோசமாகப் பாதிக்கப்படக்கூடிய அல்லது மரணமடையக்கூடிய சாத்தியம் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். 

மேலும் உலக செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்