இங்கிலாந்தில் ஒரேநாளில் 1,41,472 பேருக்கு கொரோனா பாதிப்பு...!

Keerthi
2 years ago
இங்கிலாந்தில் ஒரேநாளில் 1,41,472 பேருக்கு கொரோனா பாதிப்பு...!

இங்கிலாந்தில் கொரோனா பரவலால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் ஒரேநாளில் புதிதாக 1,41,472 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,44,75,192 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 97 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயிரத்து 154 ஆக உயர்ந்துள்ளது.

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1 கோடியே 7 லட்சத்து 80 ஆயிரத்து 899 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 35,44,139 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இங்கிலாந்து பிரதமா் போரிஸ் ஜான்சன் கூறுகையில், “கொரோனா நோய்த்தொற்றால் நமது நாட்டில் ஏராளமான உயிா்களை இழந்துள்ளோம். ஒவ்வோா் உயிரிழப்பும் அவா்களின் குடும்பத்தினா், நண்பா்களுக்கு பேரிழப்பாகும். நாம் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதுதான் இந்த நோய்த்தொற்றை வெற்றிகொள்ள வழி” என்று அவர் தெரிவித்தார். 

மேலும் உலக செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்