மேலும் ஆங் சான் சூ ச்சிக்கு 4 ஆண்டுச் சிறைத்தண்டனை

Prasu
4 years ago
மேலும் ஆங் சான் சூ ச்சிக்கு 4 ஆண்டுச் சிறைத்தண்டனை

மியன்மாரின் முன்னாள் அரசாங்க ஆலோசகர் ஆங் சான் சூச்சிக்கு (Aung San Suu Kyi) மேலும் 4 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மூன்று குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மியன்மார் நீதிமன்றம் அந்தத் தண்டனையை விதித்துத் தீர்ப்பளித்தது.


கடந்த ஆண்டு பிப்ரவரியில் ராணுவம் ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தியதுமுதல், 76 வயதுத் திருவாட்டி சூச்சி தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

வாக்கி-டாக்கி (walkie-talkie) சாதனங்களைச் சட்டவிரோதமாக இறக்குமதி செய்தது, அதை வைத்திருந்தது, கிருமித்தொற்றுக் கட்டுப்பாடுகளை மீறியது ஆகிய குற்றச்சாட்டுகளின் தொடர்பில் அவர் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது.

ஏற்கெனவே சென்றமாதம் அவருக்கு 4 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ராணுவ அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் தூண்டிவிட்டது, தேர்தல் பிரசாரத்தின்போது COVID-19 விதிமுறைகளை மீறியது ஆகிய குற்றச்சாட்டுகளின்பேரில் அந்தத் தண்டனை விதிக்கப்பட்டது.

சுமார் 12 வழக்குகளில் திருவாட்டி சூச்சி விசாரிக்கப்பட்டுவருகிறார்.

தம் மீதான எல்லாக் குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்துள்ளார். 

மேலும் உலக செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4