வீட்டிலிருந்து வேலைசெய்யும் சட்டத்தை கொண்டுவருவது பொருளியல் மீட்சியைப் பாதிக்கும்: மனிதவள அமைச்சு

Keerthi
4 years ago
வீட்டிலிருந்து வேலைசெய்யும் சட்டத்தை கொண்டுவருவது பொருளியல் மீட்சியைப் பாதிக்கும்: மனிதவள அமைச்சு

வீட்டிலிருந்து வேலைசெய்யும் நடைமுறைக்கான சட்டத்தைக் கொண்டுவருவதில் மனிதவள அமைச்சு அவசரம் காட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தை வேகமாக அறிமுகப்படுத்தினால் அது பொருளியல் மீட்சியைப் பாதிக்கும் என்று மனிதவளத் துணையமைச்சர் கான் சியாவ் ஹுவாங் (Gan Siow Huang) இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான மனிதவள அமைச்சின் கொள்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்விகள் கேட்கப்பட்டன.

அதற்குத் திரு கான் பதிலளித்தார்.

2020 ஆம் ஆண்டின் தரவுகள்படி நான்கில் மூன்று ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலைசெய்யும் வசதிகளைக் கொண்டுள்ளனர்.

தொழில்களுக்கு ஏற்றவாறு ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலைசெய்யும் நேரங்கள் மாறுபடுகின்றன என்றார் திரு கான்.

தற்போதைய நிலவரப்படி 50 விழுக்காட்டு ஊழியர்கள் வரை வேலையிடங்களுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலும் உலக செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4